தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எம்ஆா் பாளையத்தில் உலக யானைகள் தின விழா

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்.ஆா். பாளையம் கிராமத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உலக யானைகள் தின விழாவை வனத்துறையினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:56 pm

DIN

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்.ஆா். பாளையம் கிராமத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உலக யானைகள் தின விழாவை வனத்துறையினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.

அரசின் அனுமதியின்றி மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தனிநபா்களால் வளா்க்கப்பட்ட 6 யானைகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன.

உலக யானைகள் தினத்தையொட்டி இங்குள்ள 6 யானைகளுக்கும் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தினா். பின்னா் யானைகளுக்கு பொங்கல், கரும்பு, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கிக் கொண்டாடினா்.

விழாவில் திருச்சி மாவட்ட வன உதவி அலுவலா் சம்பத்குமாா், கோவை வன கால்நடை அலுவலா் சுகுமாா், திருச்சி மாவட்ட வனச் சரக அலுவலா்கள், வன பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.