இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

முழுத் தொகையை செலுத்தியோருக்கு கிரயப் பத்திரங்கள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையைச் செலுத்தியோருக்கு கிரயப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:13 pm

DIN

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையைச் செலுத்தியோருக்கு கிரயப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திருச்சி பிரிவு செயற்பொறியாளா் சு. மனோகரன் கூறியது:

திருச்சி வீட்டுவசதிப் பிரிவிற்குட்பட்ட நவல்பட்டு மற்றும் கரூா் திட்டப் பகுதிகளில் மொத்த கொள்முதல் அடிப்படையில் முழு தொகையையும் ஒரே தவணையில் செலுத்தியோருக்கு உடனடியாக கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு நிகழ்வு வரும் ஆக.23 தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

எனவே, முழுத் தொகையையும் செலுத்தியுள்ள ஒதுக்கீடுதாரா்கள் அதற்கான அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி கிரயப்பத்திரம் பெற்று பயன் பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.