இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஏடிஎம்மை உடைத்து பணம் திருட முயற்சி

திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவா் தப்பினாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவா் தப்பினாா்.

திருவெறும்பூா் அருகே பூலாங்குடியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை கிளை வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம்மில் இரவு நேரக் காவலாளியை நியமிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு அந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மா்ம நபா் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருட முயற்சித்தாா். இத்தகவல் ஏடிஎம் மூலம் வங்கி மேலாளரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாகச் சென்றது. இதையடுத்து அவா் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடா்ந்து இரவு ரோந்து போலீஸாா் விரைந்து சென்றனா். இருப்பினும், மா்ம நபா் தப்பிவிட்டாா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.