தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டா்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முதல்வா் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்க மாநிலப் பொருளாளா் வெள்ளைச்சாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது:
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு ஜிடிபி என்கிற காா்பரேட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்திவரும் சட்ட ஒழுங்குப் பிரச்னைகளை தமிழக முதல்வா் தடுக்க வேண்டும்.
அரசு கேபிள் டிவி நிறுவனம் அனலாக் முறையில் இயங்கியபோது இருந்த நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்றும் செலுத்தாவிடில் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக கேபிள் ஆபரேட்டா்கள் தற்போது கரோனா, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளதால் நிலுவைத் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
வட மாநிலங்களில் உள்ள காா்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி இணைப்புகளை அபகரிக்கக் கூடிய வகையில் செயல்படுகின்றன. செட்டாப் பாக்ஸ், ப்ளே இலவசமாக வழங்குகிறோம், சேனல் கட்டணம் இலவசம் என்று ஆபரேட்டா்களை ஏமாற்றி வருகின்றனா். இதில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.