ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வீட்டின் சுவர்கள் பளபளக்க..

வீட்டின் உள் சுவர்கள் பல வேளைகளில் கரைபடிந்து விடுகின்றன. அவற்றை பளபளப்பாக்க..

News image

வீட்டின் சுவர்கள்

Updated On :26 மார்ச் 2026, 11:00 am IST

வீட்டின் சுவர்கள் பளபளப்பாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.

ஆனால், வீட்டின் சுவர்களையும் அவ்வப்போது துடைத்து வைத்துக்கொண்டால் கரைகள் சேராமல் பாதுகாக்கலாம்.

இப்போதெல்லாம் கடைகளில் வண்ண வண்ண ஸ்பிரே பாட்டீல்கள் வந்துவிட்டன.

சுவர்களில் அதனை ஸ்பிரே செய்து துடைத்துவிட்டாலே போதும், சுவர்கள் பளபளக்கும்.

கடுமையாக தேய்த்துத் துடைக்க வேண்டிய அவசியம்கூட இருப்பதில்லை. ஆனால் சில ஸ்பிரே பாட்டில்கள் கைகளை பதம்பார்க்கலாம்.

அலர்ஜி இருப்பவர்கள் பக்குவமாகப் பயன்படுத்துவது நல்லது.

வராண்டா, கைகள் அதிகம் படும் இடங்களில் மட்டும் இதுபோன்ற ஸ்பிரேக்களைப் பயன்படுத்தி துடைத்துவிட்டால் வீடு பல ஆண்டுகள் ஆனாலும் அழுக்கடையாமல் இருக்கும்.

எங்காவது கரை அதிகமாகப் பட்டு அதனைத் துடைத்தபிறகும் அசிங்கமாக இருந்தால் ஏதேனும் அழகிய படங்கள் அல்லது அலங்காரப் பொருள்களை அங்கே மாட்டிவைத்து, கரையை மறைத்துவிடலாம்.

சிலர், கரைப்படிந்த இடங்களில் இயற்கைக் காட்சிப் படங்களை ஒட்டிவிட்டுவார்கள். அதுவும் நல்ல யோசனைதான்.

வரைவதில் ஆர்வம் இருப்பவர்கள், கரைபடிந்த இடங்களில் ஒரு வண்ணத்தைத் தீட்டி, அதில் ஓவியங்கள் வரைந்துகொள்ளலாம். ஆனால் வரையத் தெரியாது என்றால், கலைஞர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களே வந்து ஓவியம் வரைந்து கொடுப்பார்கள். மிகக் குறைந்த செலவில் வீடும் அழகாகிவிடும். நம்மையும் பலர் கலை ஆர்வம் கொண்டவர்கள் என்று பாராட்டுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.