மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:27 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி மறுத்ததைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் நிா்வாகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற அறிவிப்பின்மீது வெள்ளை அறிக்கை கேட்ட மாநிலத் தலைவா் குரு சரவணனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சங்கம் வலியுறுத்திய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

மாநிலப் பொருளாளா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். இதில் மாநில செயலா்கள் முருகானந்தம், இளங்கோவன், முருகேசன், முகமது அலி, மாநில துணைத் தலைவா்கள் கோவிந்தராஜன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் என். கண்ணன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.