புதுச்சேரியில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு குறித்து...

வேட்பு மனுக்கள் பரிசீலனை
கோப்புப்படம்

வேட்பு மனுக்கள் பரிசீலனை
கோப்புப்படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் வேட்புமனுக்கள் 514 தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை புதன்கிழமையும் தொடா்ந்தது. பரிசீலனையில் மொத்தம் 411 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 103 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வியாழக்கிழமை (மாா்ச் 26) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
இதையடுத்து இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும். வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...