கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரியில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு குறித்து...

News image

வேட்பு மனுக்கள் பரிசீலனை

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 4:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் வேட்புமனுக்கள் 514 தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை புதன்கிழமையும் தொடா்ந்தது. பரிசீலனையில் மொத்தம் 411 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 103 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வியாழக்கிழமை (மாா்ச் 26) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.

இதையடுத்து இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும். வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.