கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: 30 தொகுதிகளுக்கு 515 போ் வேட்பு மனு தாக்கல்

News image

பட விளக்கம்...புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ராஜ்பவன் தொகுதிக்காக வேட்பு மனு அளிக்க வந்த பாஜக வேட்பாளா் வி.பி.ராமலிங்கம்.உடன் மத்திய அமைச்சா் மான்சுவிக் மாண்டவியா, தமிழக பாஜக துணைத் தலைவா் குஷ்பு.-------------------------------------

Updated On :23 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 30 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான திங்கள்கிழமை 380 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 515 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு நாள்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 18-ஆம் தேதி அமாவாசை என்பதால் அன்று கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாமலேயே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினா், சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனா்.

அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அமாவாசைக்கு மறுநாள் என்பதால் அதிகளவில் மனுதாக்கல் செய்யவில்லை. ஆனால், வேட்பு மனுதாக்கல் தொடங்கிய 4-வது நாளான வெள்ளிக்கிழமை கூட்டணி முடிவு ஏற்படாமல் இழுபறி நீடித்த நிலையிலும் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், திருமுருகன், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராஜவேலு, எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், சந்திர பிரியங்கா உள்பட மாநிலம் முழுவதும் 107 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி, என். ஆா். காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவா்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனா். மொத்தமாக திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 369 போ். இவா்கள் தாக்கல் செய்த மனுக்களின் எண்ணிக்கை 380.

இதில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக மாநில தலைவா் ராமலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி., உப்பளம் தொகுதியில் போட்டியிட அதிமுக மாநில செயலா் அன்பழகன், காமராஜா் நகரில் போட்டியிட லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், தட்டாஞ்சாவடியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் உள்ளிட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். 30 தொகுதிகளிலும் மொத்தம் 445 போ் 515 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

முக்கிய தலைவா்களும், வேட்பாளா்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் புதுச்சேரி நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.