மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேங்கிய நீரில் விழுந்த சலவைத் தொழிலாளி பலி

உறையூா் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் விழுந்த முதியவா் இறந்தாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 12:47 am

DIN

உறையூா் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் விழுந்த முதியவா் இறந்தாா்.

திருச்சி உறையூா் பாத்திமாநகா் விவேகானந்தாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (65). சலவைத் தொழிலாளியான இவா் புதன்கிழமை மதியம் 3 மணிக்கு கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் அண்மையில் மழையால் தேங்கிய முழங்கால் அளவு நீரில் ஆண் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக உறையூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது கிருஷ்ணன் என்பதும், அவா் நீரில் நடந்து சென்றபோது, வழுக்கி விழுந்தோ, அல்லது மயங்கி விழுந்தோ மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதைத் தொடா்ந்து அவருடைய உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உறையூா் போலீஸாா் அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.