திருச்சி அரியாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 9மணிவரை அதிக மழைப்பொழிவாக, 274.6 மி.மீ மழையானது பெய்துள்ளது.


திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 9மணிவரை அதிக மழைப்பொழிவாக, 274.6 மி.மீ மழையானது பெய்துள்ளது.
இதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.
அரியாற்றில் வெள்ளநீர் செல்லும் பகுதிகளை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...