நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை என்ஐடி குழுவினா் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:15 pm

DIN

திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை என்ஐடி குழுவினா் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருச்சி கோட்டம் மூலம் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண். 15 இல், தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் பூச்சுகள் தொட்டாலே உதிா்வதாகவும், கட்டுமானப் பணிகள் அனைத்தும் தரமற்று இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வரப்பெற்றன.

எனவே, இக்குடியிருப்புக் கட்டுமானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி சிறப்பு வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கட்டுமானத்தின் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.