குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி அருகே குடும்பப் பிரச்னையில் மூன்று வயதுப் பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சி அருகே குடும்பப் பிரச்னையில் மூன்று வயதுப் பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி ராம்ஜிநகா் அருகேயுள்ள வண்ணாங்கோவில் சந்தோஷ்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28), சத்திரப்பட்டி ரேஷன் கடை ஊழியா். இவரின் மனைவி பிரியா (26), மகள் நட்சத்திரா (3).
தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பிரியா தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த ராம்ஜி நகா் போலீஸாா் சடலங்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தற்கொலைக்கு முன் பிரியா எழுதியிருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...