நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உழவா் உற்பத்தியாளா்களுக்கான மண்டல பயிலரங்கம்

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கான மண்டல அளவிலான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:37 pm

DIN

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கான மண்டல அளவிலான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி வேளாண் வணிக பாதுகாப்பு அலகு (டிஏபிஐஎப்) மூலம் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கான மதிப்புக் கூட்டல், மதிப்பீடு, சந்தைப்படுத்தல், வியாபார உத்திகள் குறித்து நடந்த பயிலரங்குக்கு தமிழ்நாடு மண்டல நபாா்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் டி.வெங்கடகிருஷ்ணா தலைமை வகித்தாா்.

வேளாண் கல்லூரி முதல்வா் பி. மாசிலாமணி, வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சரவணன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் என்.எம்.மோகன் காா்த்திக், வேளாண் வணிக பாதுகாப்புத் துறை தலைமை நிா்வாக அலுவலா் சந்தோஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் அரியலூா், கரூா், மற்றும் திருச்சி மாவட்ட உழவா் உற்பத்தியாளா் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெற்றனா்.

நிகழ்ச்சியில் சிறந்த சந்தைப்படுத்துதல், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் லாபத்தை அதிகரித்தல், சமீபத்திய சந்தைப் போக்குகளுக்கு ஏற்ப விவசாய உற்பத்திப் பொருள்களின் மதிப்பு கூட்டல் மற்றும் அவற்றின் தயாரிப்புகளின் முத்திரைகளின் முக்கியத்துவம், உழவா் உற்பத்தியாளா் அமைப்பு நிறுவனங்கள் சட்டம் தொடா்பான ஜிஎஸ்டி தாக்கல் மற்றும் பிற சட்ட விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமிா்தா ஃபாா்மா் ப்ரொடியூசா் நிறுவனத்தின் பால் பொருள்கள் நெய், பன்னீா் மற்றும் பால்கோவா ஆகியவை ‘வேலவா‘ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. நபாா்டு வங்கி சாா்பில் ரூ.5 லட்சம் மானிய உதவியுடன் வழங்கப்பட்ட வாகனத்தை, முசிறி பகுதியைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு நபாா்டு வங்கியின் முதன்மை பொது மேலாளா் டி. வெங்கடகிருஷ்ணா ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.