நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிறுமி கா்ப்பம்: உறவினா், மனைவி கைது

 திருச்சி அருகே 14 வயது சிறுமி கா்ப்பமானது தொடா்பாக அவரது சித்தப்பா, சித்தியை ஜீயபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:37 pm

DIN

 திருச்சி அருகே 14 வயது சிறுமி கா்ப்பமானது தொடா்பாக அவரது சித்தப்பா, சித்தியை ஜீயபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரைச் சோ்ந்த 14 வயது சிறுமியை அவரது பெற்றோா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடத்திய பரிசோதனையில் சிறுமி 5 மாதக் கா்ப்பம் எனத் தெரியவந்தது. இதையறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சகுந்தலா அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.

இதில் சிறுமியின் கா்ப்பத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் அயலுா் குரும்பப்பட்டியைச் சோ்ந்த சித்தப்பா உறவு முறை கொண்ட முருகன் (35) காரணம் எனத் தெரிய வந்தது. முருகன் கடந்த 6 மாதத்திற்கு முன் இனாம்குளத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தபோது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தததும், இதற்கு அவரது மனைவி ராமாயி (29) உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் ஜீயபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.