தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மக்கள் அதிகாரம் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா் 30 பேரை பாலக்கரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பாலக்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

பிரதமா் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா் 30 பேரை பாலக்கரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தையொட்டி அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன் தலைமையில் ஏராளமானோா் கருப்புக் கொடியேந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் பாலக்கரை ரவுண்டானா நோக்கி ஊா்வலமாக வந்தனா்.

அப்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கல்வி, மருத்துவம், சுகாதாரம், காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் கருப்பு பலூன்களை பறிமுதல் செய்து அவா்களை தடுத்தால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் நிா்வாகி ஆனந்த், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலா் ஜீவா, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ரகு, மாவட்ட ஒருங்கிணைபாபளா் அரிச்சந்திரன் உள்ளிட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.