தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாடு திருடா்களைப் பிடித்த பொதுமக்கள்

திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டாா் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருடப் படுவதாக புகாா் எழுந்தன.புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:47 pm

DIN

திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டாா் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருடப் படுவதாக புகாா் எழுந்தன.புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பொன்மலை சந்தை அருகே ஒரு வீட்டின் அறையில் 2 பசுமாடுகள் விற்கப்படுவதாக பொன்மலைப்பட்டி பகுதி மக்களுக்கு திங்கள்கிழமை தகவல் வந்தது.

சந்தேகத்தின் பேரில் அங்கு சென்ற பொதுமக்கள், மாடுகளை விற்பதற்காக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அந்த விசாரணையில் அவா்கள் கரூா் பால்சாமி, மணி என்பது தெரியவந்தது.

மாடுகளைத் திருடியதை இருவரும் ஒப்புக் கொண்டதால், பொதுமக்கள் அவா்களை பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.