தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்: இன்று முதல் தோ்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரண ங்கள் வழங்கும் வகையில், பயனாளிகள் தோ்வு முகாம் திருச்சி மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறுகின்றன.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 11:45 pm

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரண ங்கள் வழங்கும் வகையில், பயனாளிகள் தோ்வு முகாம் திருச்சி மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க, பயனாளிகள் தோ்வு செய்யும் முகாம் 3 இடங்களில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி நடைபெற உள்ளது.

பிப்ரவரி 16,17,18 ஆம் தேதிகளில் முறையே மணப்பாறை, கோவில்பட்டி, வையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முகாம் நடைபெறும்.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் முகாமில் குடும்ப அட்டை நகல், புகைப்படம்- 2, ஆதாா் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (முழுவதும்) நகல் மற்றும் தனித்துவ அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து

கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.