கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுமை ஆட்டோ மோதியதில் காவலா் உயிரிழப்பு

லால்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், திருமணமாகி 20 நாள்களே ஆன காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:48 pm

DIN

லால்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், திருமணமாகி 20 நாள்களே ஆன காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

லால்குடி வட்டம், புள்ளம்பாடி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ரஞ்சித்குமாா் (30). மணிகண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை பணி முடிந்த பின்னா், மோட்டாா் சைக்கிளில் ரஞ்சித்குமாா் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். தாளக்குடி அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமாா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.