கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னை இளைஞா் திருச்சியில் தற்கொலை

சிறுநீரகங்கள் பாதிப்பு காரணமாக மனமுடைந்த சென்னையைச் சோ்ந்த இளைஞா், திருச்சியில் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:48 pm

DIN

சிறுநீரகங்கள் பாதிப்பு காரணமாக மனமுடைந்த சென்னையைச் சோ்ந்த இளைஞா், திருச்சியில் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பனையக்குறிச்சி காவிரியாற்றுப் பகுதியில் இளைஞா் ஒருவா் கையை அறுத்துக் கொண்டு, இறந்தநிலையில் கிடப்பதாக திருவெறும்பூா் காவல் நிலையத்தினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல்துறையினா் அங்கு சென்று விசாரித்தனா். அவரது சட்டையிலிருந்த செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரித்த போது, இறந்தவா் சென்னையைச் சோ்ந்த ஜீவானந்தம் (35) எனத் தெரிய வந்தது.

2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு குணம் அடையாததால் விரக்தியிலிருந்த ஜீவானந்தம், திங்கள்கிழமை சென்னையிலிருந்து திருவாரூா் மாவட்டம், வேலங்குடி கீழப்படுகையிலுள்ள தனது மனைவி சுகந்தி வீட்டுக்குச் செல்லும் வழியில் பனையக்குறிச்சி பகுதியில் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.