மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘வேளாண் சட்டங்களால் வாழை விவசாயத்துக்கு அனுகூலம்’

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் வாழை விவசாயிகளுக்கும், வாழை விவசாயத்துக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் எஸ். உமா தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:46 pm

DIN

திருச்சி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் வாழை விவசாயிகளுக்கும், வாழை விவசாயத்துக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் எஸ். உமா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் கூறியது:

முதல் சட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மண்டியில் சந்தைப்படுத்தலாம் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, எங்கு தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ, அங்கு விற்கலாம் என்ற அனுகூலம் கிடைக்கிறது.

வாழை விவசாயத்தில் உற்பத்தி மிகை மாநிலங்களில் இருந்து, உற்பத்திக் குறைவான மாநிலங்களுக்கு வாழை வியாபாரம் செய்து லாபமடையலாம். மேலும், மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும்போது, விற்பனைக் குழுச் சந்தைகளுக்கு வெளியில் எந்தவித வரியோ அல்லது கட்டணமோ இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும்.

இரண்டாவது சட்டமான விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவை சட்டம், விவசாயிகளுக்கும், வாங்குவோருக்கும் இடையே, பொருள்களை வாங்குவது பற்றியும், பண்ணைச் சேவைகளைப் பற்றியும் சட்டபூா்வ ஒப்பந்த முறைக்கு வழிவகுக்கிறது.

இதில் ஏதாவது பிரச்னை வரும்போது, அதை நிவா்த்தி செய்வதற்கான வசதிகளையும் இச்சட்டம் கொண்டுள்ளது.

மூன்றாவது சட்டமானது, விவசாய விளை பொருள்களை இருப்பு வைப்பதில் உள்ள கட்டுபாடுகளைத் தளா்த்தியுள்ளது. அசாதாரண சூழலில் அரசு கட்டுபாடுகளை விதிக்கலாம் என்ற பிரிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழை விவசாயிகள் தங்களது பொருள்களை குளிா்ப்பதன கிடங்குகளில் பதப்படுத்தி, எப்போது தங்கள் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ அப்போது விற்று அதிக லாபம் ஈட்டலாம்.

இதோடு, உடனடி பணப்பட்டுவாடா, தொடரும் குறைந்தபட்ச ஆதார விலை, உணவுக் கழகத்தின் கொள்முதல், விற்பனைக் குழுச் சந்தைகளின் தொடா்ச்சி போன்ற மற்ற அனுகூலங்களையும் இச் சட்டங்கள் கொண்டுள்ளன.

எனவே, வாழை விவசாயிகள், இச் சட்டங்களின் அனுகூலங்களால் தங்கள் விவசாய வருமானத்தை இருமடங்காக்குவதும் சாத்தியமே என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.