ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிறந்த குழந்தைகளைக் கண்காணிக்க செல்லப்பிள்ளை திட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க செல்லப்பிள்ளை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:47 pm

DIN

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க செல்லப்பிள்ளை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 ஆயிரம் பிரசவங்களில் 30 சதம் முதல் 40 சத குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலம் பிறக்கின்றன.

இந்த மருத்துவமனையானது தொடா்ந்து 3 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மாநில அளவில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

தாய்மாா்களின் உடல் எடை, கா்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரிப்பது, ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட காரணங்களால் குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன.

இங்கு நாளொன்றுக்கு பிறக்கும் 80 முதல் 90 குழந்தைகளில் 15 முதல் 20 குழந்தைகள் குறைபாடுடையதாக உள்ளன. இக் குழந்தைகளுக்காக உள்ள சிசு பராமரிப்புப் பிரிவில் தனியாா் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் உள்பட 80 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன.

இங்கு எடைக் குறைவு, நோய் தொற்று மற்றும் சத்துக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தாய்ப் பால் மற்றும் சத்தான உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க செல்லப்பிள்ளை திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் சிகிச்சைத் துறைத் தலைவா் மைதிலி கூறுகையில், அரசு மருத்துவமனையில் சத்துக் குறைபாடு, எடைக் குறைவான குழந்தைகளுக்கு அங்கன்வாடிப் பணியாளா்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு தாய்ப் பால் கொடுக்கப்படுகிா எனக் கண்காணிக்கப்பட்டது.

ஆனால் இத் திட்டத்தில் மூலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் இரு பணியாளா்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு அவா்களால் சிசு பாராமரிப்புப் பிரிவில் உள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு, தாய்மாா்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்குச் சென்ற பிறகும் பிறந்த குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

புத்தாண்டில் 20 குழந்தைகள்: திருச்சி அரசு மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மட்டும் 10 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.