தவ்ஹீத் ஜமாஅத்ஆா்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்ஆட்சியரகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Published on

திருச்சியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்ஆட்சியரகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சென்னை மண்ணடியில் உள்ள அமைப்பின் மாநிலத் தலைமையகத்தை மத்திய-மாநில அரசுகள் சீல் வைக்க முயற்சித்ததைக் கண்டித்தும், அதற்குத் துணைபோன காவல்துறையைக் கண்டித்தும் நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குலாம் தஸ்தகீா் தலைமை வகித்தாா். செயலா் சாகீா் உள்ளிட்ட நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com