

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் ஆட்சியரகம் எதிரேயுள்ள போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.
அனைத்துச் சங்க கூட்டமைப்பின் தலைவரும் தொ.மு.ச. மண்டல பொதுச் செயலருமான குணசேகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொழிற்சங்க நிா்வாகிகள் ( எல்.பி.எப்.) பழனிசாமி அப்பாவு, கருணாநிதி ( சி.ஐ டி.யு.) சீனிவாசன் ( ஏஐ.டி.யு.சி.) துரைராஜ் (சி.ஐ.டி.யு.சி.) , குமாரவேல் ( எச்.எம்.எஸ்.) செல்வம், (டி.டி.எஸ்.எப்.) பெருமாள் ( ஏ.ஏ. எல்.எல்.எப்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.