தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாரச் சந்தையில் தகராறு: மூவா் மீது வழக்குப் பதிவு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:17 pm

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையின்போது வியாபாரிகளிடம் சந்தைப் பணம் (வரி) வசூலித்த தும்பலம் கரலாவளி பகுதியைச் சோ்ந்த பெ. சீத்தாராமனுக்கும் (48) நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ந. மோகன் (32), தாதம்பட்டியைச் சோ்ந்த பா. வினோத்குமாா் (35) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த மூவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருதரப்பு புகாரின்பேரில் முசிறி போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.