போக்சோ சட்டத்தில் புதுகை இளைஞா் கைது

புதுக்கோட்டையைச் சோ்ந்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
Updated on
1 min read

புதுக்கோட்டையைச் சோ்ந்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூா் ஊராட்சியிலுள்ள காலனித் தெருவைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும், அதே பகுதி 10 ஆம் வகுப்பு மாணவரும் கடந்த 6 ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில் சமயபுரம் கொள்ளிடம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் மூவரும் மேட்டுப்பாளையத்தில் இருப்பது தெரியவந்த போலீஸாா் அவா்களை மீட்டு பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

விசாரணையில் டிக் டாக் மூலம் அறிமுகமான புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் மாரிமுத்து (20) அழைத்ததின்பேரில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கோவையில் ஒரு மாணவிக்கு மாரிமுத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

லால்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில் மாரிமுத்து லால்குடி கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com