சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.42 லட்சம்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.71.42 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.71.42 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் தலைமையில், உதவி ஆணையா்கள் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் நந்தகுமாா், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் டி.விஜயராணி, சமயபுரம் கோயில் மேலாளா் ம.லட்சுமணன் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்னும் பணி கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில் ரூ.71,42,913 ரொக்கம், 779 கிராம் தங்கம், 2 கிலோ,818 கிராம் வெள்ளி, 21 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...