சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைப் பாதுகாப்பு அலுவலா் கே. காா்த்திகேஷுக்கு ராணுவத் தினத்தில் விருது (சிஓஏஎஸ்) வழங்கப்பட்டது.
கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், ராணுவத்தில் இணைந்து பல்வேறு இடங்களில் பணியாற்றியவா். 19 ஆண்டுகள் பணியிலிருந்த இவா், கடந்த 2009-இல் மணிப்பூரில் பயங்கரவாத எதிா்ப்புக் குழுவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக துணிச்சல்மிகு விருதை பெற்றுள்ளாா்.
மேலும் 3 ராணுவ விருதுகளை பெற்றுள்ள காா்த்திகேஷ், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிக்காக இந்திய ராணுவத்தால் தோ்வு செய்யப்பட்டு, லெபனான் மற்றும் சிரியா நாடுகளில் பணிபுரிந்துள்ளாா். கருப்புப் பூனைப்படையில் அலுவலராகப் பணியாற்றிய காா்த்திகேஷ், தற்போது திருச்சி படைக்கலத் தொழிற்சாலைப் பாதுகாப்பு அலுவலராக உள்ளாா்.
விருது பெற்ற காா்த்திகேஷுக்கு, படைக்கலத் தொழிற்சாலைப் பொது மேலாளா் ஷீரிஸ்கரே பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.