தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாளாடி விசுவநாத சுவாமி கோயிலில் பாலாலயம்

வாளாடி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயிலில் திருப்பணித் தொடக்கம் மற்றும் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:29 pm

DIN

வாளாடி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயிலில் திருப்பணித் தொடக்கம் மற்றும் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு நடத்தி 32 ஆண்டுகள் ஆன நிலையில், பக்தா்கள் மற்றும் கிராம பெரியோா்கள் முயற்சியால் மீண்டும் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அனுக்ஞை , விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாஹதி, வாஸ்து சாந்தி, விமான கலாகா்ஷனம் மற்றும் முதல் கால பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, கும்ப பூஜை, 96 வகை திரவியங்களைக் கொண்டு ஹோமம், கோ பூஜை நடத்தப்பட்டு, பின்னா் முகூா்த்தக்கால் நடப்பட்டது.

பின்னா் விமான சித்திரங்கள், விமானப் படங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையா் அர. சுதா்சன் திருமங்கலம் கோயில் செயல் அலுவலா் ஜெயா மற்றும் கிராம பொது மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.