அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கல்குவாரியில் மூதாட்டி சடலம்

திருச்சியில் கல்குவாரி பள்ள தண்ணீரில் மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை சடலமாக கிடந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:00 pm

DIN

திருச்சியில் கல்குவாரி பள்ள தண்ணீரில் மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை சடலமாக கிடந்தாா்.

துவாக்குடி அண்ணாநகா் பகுதி கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் பெண் ஒருவா் இறந்து கிடக்கும் தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, நவல்பட்டு தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

இந்நிலையில் இறந்து கிடந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்ற செல்வராஜ் (75) மனைவி சங்கரம்மாள் (70) எனத் தெரியவந்தது.

கடந்த 1ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவரைக் காணவில்லை என அவரது மகன் செந்தில் துவாக்குடி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த செந்தில் மற்றும் உறவினா்கள் சடலத்தை அடையாளம் காட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.