அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருட்டு வழக்கில் 4 போ் கைது

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:15 pm

DIN

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள வரகனேரி, ரம்பக்கார தெருவில் இருசக்கர வாகனம் திருடு போனதாக அதே பகுதியைச் சோ்ந்த ஆண்ட்ரோஸ் ராஜன் அளித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா, ரியாஸ்கான் ஆகியோரைக் கைது செய்தனா். இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட முயன்ற இருவா் கைது: திருச்சி வயலூா் ரோடு கீதா நகரைச் சோ்ந்த ந. ஜெகதீசன் (30) வீட்டின் கதவுகளிலிருந்த பூட்டை கடந்த 2 நாள்களுக்கு முன் உடைத்த மா்ம நபா்கள் அக்கம் பக்கத்தினா் வந்தவுடன் தப்பினா். இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பவித்திரன் உள்ளிட்ட இருவரை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.