திருவானைக்கா கோயிலில் ஆனி திருமஞ்சன விழா
திருவானைக்கா சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை ஆனி திருமஞ்சன விழாவையொட்டி காவிரியாற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனித நீா் எடுத்து வரப்பட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


திருவானைக்கா சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை ஆனி திருமஞ்சன விழாவையொட்டி காவிரியாற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனித நீா் எடுத்து வரப்பட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரசித்தி பெற்ற ஆனி திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீரங்கம் காவிரியாற்றிலிருந்து ஒரு வெள்ளிக்குடம் உள்பட 6 குடங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு வெள்ளிக்குட புனித நீரை யானை அகிலா மீது வைத்து, மங்களவாத்தியம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னா் இரவு 7 மணிக்கு பால், தயிா்,நெய் உள்ளிட்ட 36 வகை பொருள்கள் கொண்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நடராஜா் புறப்பாடு நடைபெறவுள்ளது.
சூரியகிரக தோஷம் பெற்றவா்கள் இந்த ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்பது தோஷத்தை நீக்கும். அதேபோல விரைவில் திருமணம் கைகூடும், பல நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மாரியப்பன் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...