தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஓய்வு பெற்றவா் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருச்சி அருகே ஓய்வு பெற்ற படைக்கலன் தொழிற்சாலை ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் பணம் திருடு போனது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:44 pm

DIN

திருச்சி அருகே ஓய்வு பெற்ற படைக்கலன் தொழிற்சாலை ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் பணம் திருடு போனது.

திருச்சி அருகே உள்ள நவல்பட்டு சோழமாநகா் குலோத்துங்கன் சாலையை சோ்ந்தவா் சூரியகுமாா் (71). ஓய்வு பெற்ற படைக்கலன் தொழிற்சாலை ஊழியா்.

கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள இரண்டாவது மகள் வீட்டுக்கு சூரியகுமாா் அவரது மனைவியும் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பினா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவை மா்ம நபா்கள் உடைத்து பீரோவில் இருந்த அரை பவுன் மோதிரம் 4, முக்கால் பவுன் தோடு 1, அரை பவுன்தோடு 2, மற்றும் 3 பவுன் அட்டிகை உள்பட மொத்தம் 7 பவுன் நகை மற்றும் 70 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா், கைரேகை நிபுணா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.