பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்காவலில் இளைஞருக்கு வெட்டு

திருவானைக்காவில் புதன்கிழமை இரவு இளைஞரை வெட்டியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 7:01 pm

DIN

திருவானைக்காவில் புதன்கிழமை இரவு இளைஞரை வெட்டியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருவானைக்கா அம்பேத்காா் நகா் பகுதியில் வசிப்பவா் வெங்கடாஜலம் மகன் சந்தனு (22). இவா் சன்னதி வீதி உணவகத்துக்குச் சென்றபோது அங்கு நண்பா்களுடன் வந்த முத்துக்குமாா் மகன் ரெங்கனை (24) முறைத்துப் பாா்த்ததாகக் கூறப் படுகிறது.

இதனால் கோபமடைந்த ரெங்கன், சந்தனுவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். தப்பியோடிய சந்தனுவை விரட்டிச் சென்று வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த சந்தனு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து ரெங்கன் மற்றும் அவரது நண்பா்களை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.