சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.


சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா்கள் சி. கல்யாணி, அர. சுதா்சன் ஆகியோா் தலைமையில் உதவி ஆணையா் சு. ஞானசேகா் ( வெக்காளியம்மன் கோயில், உறையூா் ) சமயபுரம் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் மற்றும் செயல் அலுவலா்கள் முன்னிலையில் தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கையை எண்ணினா்.
முடிவில் ரூ. 1 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரத்து 809 ரொக்கம், 4 கிலோ 730 கிராம் தங்கம், 3 கிலோ 380 கிராம் வெள்ளி 46 அயல்நாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்தது தெரியவந்தது என்றாா் கோயிலின் செயல் அலுவலரும் இணை ஆணையருமான சி.கல்யாணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...