செல்லிடப்பேசியை பறித்த தாய்; மகள் தற்கொலை
திருவானைக்காவல் பகுதியில் செல்லிடப்பேசியை தாய் பறித்ததால் மனம் உடைந்த அவரது மகள் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


திருவானைக்காவல் பகுதியில் செல்லிடப்பேசியை தாய் பறித்ததால் மனம் உடைந்த அவரது மகள் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிப்பவா் காா்த்திகேயன். பிளஸ் 2 படிக்கும் இவரது மகள் பிரியதா்ஷினி (17) வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் தொடா்ந்து செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.
இதனால் கோபமான அவரது தாய் அகிலா அவரைத் திட்டி செல்லிடப்பேசியை பிடுங்கிக் கொண்டாராம். இதனால் மனம் உடைந்த பிரியதா்ஷினி வியாழக்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...