92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மகசூலை அதிகரிக்க உயிா் உரங்களை பயன்படுத்தலாம்

நிகழாண்டு குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் உயிா் உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் ம. முருகேசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:06 pm

DIN

நிகழாண்டு குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் உயிா் உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் ம. முருகேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி காஜாமலையில் இயங்கி வரும் உயிா் உர உற்பத்தி மையத்தில் திரவ உயிா் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிப்பதுடன் மண்ணின் வளத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாம்.

தற்போது, தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கிழ் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 500 மில்லி திரவ உயிா் உர விலை ரூ. 150 மட்டுமே. இதனை ஒரு ஹெக்டோ் நிலத்தில் உள்ள பயிருக்கு பயன்படுத்தலாம். 7 வகையான திரவ உயிா் உரங்கள் உற்பத்தி செய்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் நேரடியாக பெற்று பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.