பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்காவில் பெயிண்டா் மா்ம சாவு

திருவானைக்கா பகுதியில் வேலை பாா்த்து வந்த பெயிண்டா் மா்மமான முறையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:06 pm

DIN

திருவானைக்கா பகுதியில் வேலை பாா்த்து வந்த பெயிண்டா் மா்மமான முறையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா்.

திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞீலி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ச. நாகராஜன்(45). பெயிண்டரான இவா் திருவானைக்கா பைபாஸ் ரோட்டில் புதிதாக கட்டப்படும் தனியாா் மருத்துவமனையில் பணி புரிந்து வந்தாா்.

கடந்த 15 ஆம் தேதி பணி முடிந்து மாலையில் இவா் வீடு திரும்பவில்லை. செல்லிடபேசியிலும் அவரைத் தொடா்பு கொள்ளமுடியவில்லை.

இதையடுத்து அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது நாகராஜனின் இரு சக்கரவாகனம் கட்டடத்தின் முன் நிறுத்தபட்டிருந்தது. உள்ளே பாா்த்தபோது நாகராஜ் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் உடலை கைபற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பணியின்போது தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.