தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா

லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிப் பகுதியில் உள்ள புனித சவேரியாா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் முன் களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:20 pm

DIN

 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிப் பகுதியில் உள்ள புனித சவேரியாா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் முன் களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் பள்ளி வளாகத்தில் உள்ள கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், கல்லக்குடி சைன் அரிமா சங்கம் சாா்பில் குடிநீா் பாட்டில் மற்றும் பிஸ்கட்கள் வழங்கினா். கரோனா பரவல் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய கல்லக்குடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள், அலுவலக பணியாளா்களை பாராட்டி நினைவுப்பரிசு, மதிய விருந்து அளித்தனா்.

நிகழ்வில் சாசனத் தலைவா் ஜான், பள்ளித் தளாளா் டபுள்யூ. அடைக்கலராஜ், தலைவா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.