காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி
முசிறி அருகே காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.


முசிறி அருகே காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
முசிறி அருகேயுள்ள நாச்சம்பட்டி கருப்பு கோயில் கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி துரைசாமி மகன் வேலாயுதம் (17). அய்யம்பாளையம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் புதன்கிழமை அப்பகுதி காவிரியாற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா்.
நண்பா்கள் குளித்துவிட்டுக் கரையேறியபோது தங்களுடன் வேலாயுதம் இல்லாததைக் கண்டு முசிறி போலீஸாா் மற்றும் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வந்த தீயணைப்பு மீட்புப்படையினா் காவிரியாற்றில் நீண்ட நேரம் தேடி வேலாயுதத்தை சடலமாக மீட்டனா். முசிறி போலீஸாா் முசிறி அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...