மொபெட்டில் சென்றபள்ளி ஆசிரியை வாகனம் மோதி பலி
முசிறி அருகே மொபெட்டில் சென்ற பள்ளி ஆசிரியை வாகனம் மோதி உயிரிழந்தாா்.


முசிறி அருகே மொபெட்டில் சென்ற பள்ளி ஆசிரியை வாகனம் மோதி உயிரிழந்தாா்.
முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே வசித்தவா் சுரேஷ் மனைவி அம்பிகா (46). மாற்றுத் திறனாளியான இவா் துறையூா் அருகிலுள்ள சிங்கம்பட்டி அரசுப் பள்ளியின் தமிழாசிரியை.
புதன்கிழமை மாலை இவா் தனது மூன்று சக்கர வாகனத்தில் முசிறி துறையூா் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி இறந்தாா்.
தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து வாளவந்தியை சோ்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநா் பெருமாளிடம் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...