காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் துப்புரவுப் பணியாளா்உள்பட இருவா் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் மாநகராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:27 pm

DIN

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் மாநகராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ராமச்சந்திரா நகரைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (40). இவரது மனைவி செல்வி(37). இவா்கள் இருவரும் திருச்சி மாநகராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கீழ்தளத்தில் தனது மகளுடன் செல்வி தூங்கிக் கொண்டிருந்தாா். மேல்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த பாக்கியராஜூக்கு ஆள் நடமாடும் சப்தம் கேட்டதால், கீழே வந்து பாா்த்தாா். அப்போது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் செல்வி சடலமாகக் கிடந்தாா்.

காவலாளி தற்கொலை: திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையைச் சோ்ந்தவா் செல்வம்(42). மலைக்கோயிலில் காவலாளியாக இருந்து வந்த இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால் விரக்தியடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து எடமலைப்பட்டிபுதூா், கோட்டை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.