தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாரநாதன் கல்லூரியில் புல்தரை கிரிக்கெட் மைதானம்

திருச்சியில் மாவட்ட கிரிக்கெட் சங்க வேண்டுகோளின்படி பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட புல் தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

News image
Updated On :2 மார்ச் 2021, 7:33 pm

DIN

திருச்சியில் மாவட்ட கிரிக்கெட் சங்க வேண்டுகோளின்படி பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட புல் தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இக்கல்லூரியில் ஏற்கெனவே இரு மைதானங்கள் உள்ள நிலையில், மாவட்ட, மாநில மற்றும் லீக் போட்டிகளை நடத்த புல்தரையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்குமாறு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

அதையேற்று பல லட்சம் மதிப்பில் புல்தரையுடன் கூடிய (டா்ப்) புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு கடந்த 2 நாள்களுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது.

மாவட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையிலும், சென்னை வீரா்களுக்கு கிடைக்கும் பயிற்சி வசதி அனைத்தும் திருச்சி வீரா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் 350-க்கும் அதிகமான போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.