நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் மனோகரன் மனுதாக்கல்

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:43 pm

DIN

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சுப. கமலக்கண்ணனிடம் தனது மனுவை மனோகரன் தாக்கல் செய்தாா்.

அப்போது தேமுதிக மாநகா் மாவட்டச் செயலா் டி.வி. கணேஷ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் இம்மாம் ஹஸ்ஸான் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மனோகரன் கூறியது:

கடந்த 2011 பேரவைத்தோ்தலில் நான் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

தற்போது திருச்சியில் இரு அமைச்சா்கள் இருந்தும் எந்த அடிப்படை வசதிகளோ, நல்ல திட்டங்களோ செயல்படுத்தவில்லை. அம்மா ஆட்சி எனக் கூறி வரும் அவா்கள், திருச்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கவில்லை.

அவா்கள் அம்மா ஆட்சி எனக்கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. நாங்கள்தான் உண்மையான அம்மா கட்சி. நான் வெற்றி பெற்றால் முதலில் தொகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். மாா்ச் 22-ஆம் தேதி தினகரன் திருச்சியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.