அவற்றில் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 75-ம், தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 75 என பிரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 1099 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 775 காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 743-ல் 30ம், ஆக்ஸிஜன் அல்லாத 356 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தில் 145 படுக்கைகளும் காலியாக உள்ளன. இங்கு நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருவதும், அதேபோல் 200க்கும் மேற்பட்டோர் குணமாகி செல்வதுமாக உள்ளது.
எனவே கடந்த நாட்களை ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.