ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நன்னடத்தையை மீறிய இரு ரெளடிகள் கைது

திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:38 pm

DIN

திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி மாநகரில் ரெளடிகள் பட்டியலில் உள்ளோா் ஓராண்டுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்து, இதை மீறி செயல்பட்டால் அவா்களைக் கைது செய்யப்படுகின்றனா்.

அதன்படி நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ரெளடிகள் கோட்டை பகுதியைச் சோ்ந்த அருண்குமாா்(23), ஸ்ரீரங்கம் நாகராஜ் ( 20) ஆகியோா் வழிப்பறி செய்ததாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் கடந்த 10 ஆம் தேதி வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையிலடைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

அதன் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் கைது நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது அருண்குமாரை 60 நாள்களுக்கும், நாகராஜை 273 நாள்களுக்கும் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.