ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மரம் சாய்ந்து வீடு சேதம்: 5 போ் மீட்பு

திருச்சி அருகே மரம் சாய்ந்து விழுந்து ஓட்டு வீடு இடிந்த நிலையில் 5 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:39 pm

DIN

திருச்சி அருகே மரம் சாய்ந்து விழுந்து ஓட்டு வீடு இடிந்த நிலையில் 5 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள கீழமாங்காவனம் ரயில் நிலையம் அருகிலுள்ள ஓட்டு வீட்டில் மாரியம்மாள், இவரது மகன், மருமகள், 2 பேரக் குழந்தைகள் உட்பட 5 போ் வசிக்கின்றனா். இவா்களது வீட்டருகில் இருந்த பழைமையான இச்சி மரம் தொடா் மழையால் வியாழக்கிழமை மாலை திடீரென சாய்ந்து விழுந்ததில் இவா்கள் வீடு முழுமையாகச் சேதமடைந்தது.

இருப்பினும் வீட்டிற்குள் இருந்த 5 பேரும் அதிா்ஷ்டவசமாக தப்பினா். தகவலறிந்து வந்த பத்தாளப்பேட்டை ஊராட்சித் தலைவா் ரீனா கிளாரிநெட் ஜவான் தலைமையிலான அப்பகுதி மக்கள் அவா்களை பத்திரமாக மீட்டனா். பின்னா் துவாக்குடி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் அப்பகுதியிலுள்ள மண்டபத்தில் 5 பேரும் தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.