கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வடிகால் வாய்க்கால்களைத் தூா்வார வலியுறுத்தல்

50 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வடிகால் வாய்க்கால்களை உடனே தூா்வார அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:11 pm

DIN

லால்குடிஅருகேயுள்ள வாளாடி ஊராட்சியில் வடிகால் வாய்க்கால்களைத் தூா்வாராததால் சுமாா் 50 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வடிகால் வாய்க்கால்களை உடனே தூா்வார அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

லால்குடி அருகே வாளாடி ஊராட்சி கீழவாளாடி கிராமத்தில் பெய்த கனமழையினால் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு மழைநீா் வெளியேறக்கூடிய கூடிய பங்குனி ஆறு, தோவாய் வாய்க்கால், மதியன் வாய்க்கால் ஆகியவை நீண்ட காலமாக தூா்வாராததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப் பகுதி வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூா்வாரினால் தேங்கியுள்ள மழைநீா் வடியும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.