முசிறி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
முசிறி அருகேயுள்ள திரணியாம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகள் ராஜலட்சுமி (55). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் மின் சுவிட்சை இயக்க முயன்றபோது அதில் கசிந்திருந்த மின்சாரம் பாய்ந்து இறந்தாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.