வீட்டுக் காவலில் அய்யாக்கண்ணு
மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாகண்ணு போலீஸாரால் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளாா்.


மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாகண்ணு போலீஸாரால் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளாா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சனிக்கிழமை (அக். 2) கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் விவசாயிகளுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தாா்.
இதையடுத்து உறையூா் காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையிலான போலீஸாா் அய்யாகண்ணு வீட்டுக்குச் சென்று அவரிடம் நடத்திய விசாரணையில் போராட்டத்துக்காக கன்னியாகுமரி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடாதபடி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அங்கு வந்த விவசாயிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விவசாயிகள் கன்னியாகுமரி செல்வதைத் தடுக்க மாநகரின் முக்கிய சந்திப்புகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...