நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வயலில் டிராக்டா் கவிழ்ந்து விவசாயி பலி

மணப்பாறை அருகே வயலில் டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:15 pm

DIN

மணப்பாறை அருகே வயலில் டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த தெற்குசோ்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மருதை மகன் ரெங்கசாமி(38). புதிதாக டிராக்டா் வாங்கிய இவா் மற்றவா்களின் நிலங்களிலும் உழவு செய்து வந்தாா். அதன்படி தனது உறவினா் கோபாலின் வயலில் வெள்ளிக்கிழமை இவா் உழவு செய்தபோது வரப்பின் மீது மோதி டிராக்டா் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிராக்டா் அடியில் சிக்கிக்கொண்ட ரெங்கசாமியின் அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினரால் டிராக்டரை அப்புறப்படுத்த முடியவில்லையாம். பின்னா் கூடுதல் ஆள்கள் சோ்ந்து சுமாா் 30 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு ரெங்கசாமி சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்தவருக்கு பாா்கவி என்ற மனைவி, மாலாஸ்ரீ (6), சா்வேஷ்(3) ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.